அரியலூர் மாவட்டத்தில் இன்று 11 பேருக்கு கொரோனா

அரியலூர் மாவட்டத்தில் இன்று புதியதாக 11 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Update: 2021-09-15 16:01 GMT

கோப்பு படம்

அரியலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் கொரோனாவால் 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று குணமடைந்து வீடு திரும்பியர்வர்கள் 11 பேர். மருத்துமனைகளில் 139 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று வரை 16,546 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 16,155 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 252 பேர் உயிரிழந்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட கொரோனா சிறப்பு முகாம்கள் 12,150. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 5,91,740. அவற்றில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 38,533 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1,822 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 36,435 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 109 பேர்.

மாவட்டத்தில் இன்று கொரோனா முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 2030 பேர். இவர்களில், முதல் தடுப்பூசியை 1537 பேர் போட்டுக் கொண்டுள்ளனர். 2ம் தடுப்பூசியை இன்று 493 பேர் போட்டுக் கொண்டுள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News