அரியலூர் மாவட்டம் திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயில் மாசிமகத் தேரோட்டம்
அரியலூர் மாவட்டம் திருமழபாடி சுந்தராம்பிகை உடனுறை வைத்தியநாதசுவாமி கோயிலில் மாசிமகத் தேரோட்டம் இன்று நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள திருமழபாடியில் திருமால், இந்திரன் ஆகியோரால் வழிபட பெற்றதும், ஞானசம்மந்தர், அப்பர், சுந்தரர், ஐயடிகள், காடவர்கோன் ஆகியோர் திருப்பதிகங்கள் பாடி வழிப்பட்ட வரலாற்று புகழ்பெற்ற சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது.
இந்த கோயிலில் ஆண்டுதோறும் மாசிமகப்பெருவிழா நடைபெறும். நிகழாண்டுக்கான மாசிமகப் பெருவிழா விழா கடந்த 8 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமிகள் எழுந்திருளி வீதியுலா நடைப்பெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேரோட்டம் இன்று நடைபெற்றது. தேரில் சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாதசுவாமி அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இந்து அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் பக்தர்கள் பெரியதேரை வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். தேர் ஊரின் முக்கிய வீதி வழியாக வலம் வந்து நிலையை அடையும். திருமானூர் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.