அரியலூர்-சென்னை பேருந்து மாலை 3 மணியுடன் நிறுத்தப்படும்

அரியலூரில் இருந்து சென்னைக்கு செல்லும் பேருந்து மாலை 3 மணியுடன் நிறுத்தப்படும்.

Update: 2021-04-19 14:51 GMT

அரியலூர் மாவட்ட கலெக்டர் த.ரத்னா விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியதாவது,

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு ஆகியவற்றை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதில் நாளை முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பேருந்துகள் இயக்கம் செய்யக் கூடாது என்று அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அரியலூர் பேருந்து நிலையத்திலிருந்து சென்னைக்கு மாலை 3 மணிக்கும், ஜெயங்கொண்டத்திற்கு இரவு ஒன்பது மணிக்கும், செந்துறை இரவு 8 மணிக்கும், திட்டக்குடி இரவு 8 மணிக்கும், பெரம்பலூர் இரவு 9 மணிக்கும், கும்பகோணம் இரவு 7 மணிக்கும், தஞ்சாவூர் இரவு எட்டரை மணிக்கும், திருச்சி இரவு 8 மணிக்கும் கடைசி பேருந்துகள் இயக்கப்படும். இதற்குப் பின்னர் மேற்கண்ட வழித்தடங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்படாது.

இதுபோன்று ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்திலிருந்து சென்னைக்கு மாலை 4 மணிக்கும், விருத்தாசலத்தில் இரவு 8 மணிக்கும், காட்டுமன்னார்குடி இரவு 8 மணிக்கும், கும்பகோணம் இரவு 8 மணிக்கும், அனக்கரை இரவு 9 மணிக்கும், அரியலூர் இரவு எட்டரை மணிக்கும், திருச்சி இரவு 7 மணிக்கும், கடைசி பேருந்துகள் இயக்கப்படும்.

மேலும் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படும். நகரப் பேருந்துகள் இரவு ஒன்பதரை மணி நடை எடுத்து அந்தந்த ஊர்களுக்கு இரவு தங்கள் செய்யப்படும் பேருந்துகள் வழக்கம் போல் அனைத்து வழித்தடங்களிலும் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் இயக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் த.ரத்னா அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News