டாஸ்மாக் இரண்டு நாட்கள் விடுமுறை
மகாவீர் ஐயந்தி 25.04.2021 அன்று மற்றும் மே தினம் 01.05.2021 ஆகிய இரண்டு நாட்கள் டாஸ்மாக் விடுமுறை
அரியலூர் மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள செய்திகுறிப்பில், அரியலூர் மாவட்டத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான சில்லறை விற்பனைகடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக் கூடங்கள் அனைத்தும் 25.04.2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மகாவீர் ஐயந்தி மற்றும் 01.05.2021 (சனிக்கிழமை) மே தினம் ஆகிய இரண்டு நாட்கள் உலர்தினமாக (DRY DAY) விடுமுறை என மாவட்ட கலெக்டர் த.ரத்னா தெரிவித்துள்ளார்.