அரியலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை 4 நாள் மூட கலெக்டர் உத்தரவு

ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி அரியலூர் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் மது பான கடைகளை மூட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.

Update: 2021-10-06 04:31 GMT

அரியலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல் வருகின்ற ஒன்பதாம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு,  மாவட்டத்தில் இயங்கி வரும் அழகாபுரம், முடிகொண்டான், வாரியங்காவல், இரும்புலிக்குறிச்சி, தளவாய், ஏலாக்குறிச்சி, விரகளூர், ஆகிய 7 தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் வருகின்ற ஏழாம் தேதி காலை 10 மணி முதல் ஒன்பதாம் தேதி நடு இரவு பன்னிரண்டு மணி முடிய மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் அரியலூர் நகரிலுள்ள 8 மதுபான விற்பனை கடைகளும், எழுத்துக்காரன் பட்டி, ஆண்டிமடம், கப்பலூர், திருமானூர், முடிகொண்டான், விரகளூர், செந்துறை மற்றும் ராயபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள 21 மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் ஆகியவை வருகின்ற 12ஆம் தேதி ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News