தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-24 06:15 GMT

அரியலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், செந்துறை, உடையார்பாளையம், ஆண்டிமடம் ஆகிய வட்டங்களை மையமாக கொண்டு முந்திரி பழச்சாறு தொழிற்சாலையை அமைக்க வேண்டும். தா.பழூர் அருகே பொன்னாற்று தலைப்பில் கொள்ளிடத்தின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

ஆர்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பூ.விசுவநாதன் தலைமை வகித்தார். முந்திரி தழை மற்றும் காய்களுடன் கலந்து கொண்ட சங்க நிர்வாகிகள், கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

Tags:    

Similar News