அரியலூர் காவலர் குடியிருப்பில் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையம் திறப்பு

அரியலூர் மாவட்ட ஆயுதப்படை குடியிருப்பு வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஏ.டி.எம். திறக்கப்பட்டது.

Update: 2022-04-15 04:45 GMT

 அரியலூர் ஆயுதப்படை குடியிருப்பு வளாகத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ATM ஐ அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பெரோஸ் கான் அப்துல்லா திறந்து வைத்தார்.


அரியலூர் மாவட்ட காவல்துறையினர் பயனடையும் வகையில் அரியலூர் ஆயுதப்படை குடியிருப்பு வளாகத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ATM அமைக்கப்பட்டு வந்தது. முழுமையாக பணி நிறைவடைந்த நிலையில் இதனை அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா இன்று காவலர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

உடன் ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் மணவாளன், அரியலூர் ஸ்டேட் பேங்க் மேலாளர் குமரவேல், ATM நிறுவுவதற்கு உதவியாக இருந்த சிமெண்ட் சிட்டி லயன்ஸ் சங்க சுந்தர், ஜமின் வெங்கடேசன், வழக்கறிஞர் மனோகரன் மற்றும் காவல்துறை அதிகாரிகள், உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் விழாவில்  கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News