அரியலூரில் 25-ம்தேதி முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்

அரியலூரில் வருகிற 25ம் தேதி படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்க இருப்பதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்

Update: 2022-08-14 13:28 GMT

பைல் படம்.

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரியலூர் மாவட்டமுன்னாள் படைவீரர், அவர்தம் குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கென சிறப்பு குறைதீர்க்கும் நாள் 25.08.2022 வியாழக்கிழமை மாலை 4.00 மணிக்கு மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீர்கும் நாள் கூட்ட அரங்கத்தில் நடத்தப்படவுள்ளது.

எனவே, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர், அவர்தம் குடும்பத்தினர் மற்றும் படைப்பணியில் பணிபுரிபவர்களைச் சார்ந்தோர்கள் தங்களது கோரிக்ககையினை மனுவாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் அன்றைய தினம் நேரில் சமர்ப்பிக்கலாம்.

மேலும் மனுக்கள் அளிக்க விரும்புவோர் மனுவின் இருபிரதிகளை அடையாள அட்டை நகலுடன் அளித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News