மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் ஒத்திவைப்பு

அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Update: 2022-01-15 06:15 GMT

இது தொடர்பாக, அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கும் தேசிய அடையாள அட்டை வழங்கவும், மாற்றுத்திறனாளிகளின் சிரமங்களை தவிர்க்கும் பொருட்டு, பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் மாதத்தின் முதல் மற்றும் மூன்றாம் வியாழக்கிழமைகளில் அனைத்து மருத்துவர்கள் கொண்டு நடைப்பெற்று வந்தது. 

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கிடும் முகாம்,  ஒமைக்ரான் மற்றும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால்,  முன்னெச்சரிக்கை நடவடிக்கை விதமாக தொற்று குறையும் வரை அடையாள அட்டை வழங்கும் முகாம் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுகிறது.

மேலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும்,  அரசு விதிமுறைகளை பின்பற்றி நோய் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் முகக்கவசம் அணிந்து தங்களை தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News