அரியலூரில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.

Update: 2022-09-17 10:15 GMT

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தந்தை பெரியார் அவர்களின் 144வது பிறந்தநாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.


அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தந்தை பெரியார் அவர்களின் 144வது பிறந்தநாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.

உறுதி மொழி நிகழ்ச்சியில், பிறப்பொக்கும் எல்லா உயிரக்கும் என்ற அன்பு நெறியையும், யாதும் ஊரோ யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறைகளாகக் கடைப்பிடிப்பேன். சுயமரியதை ஆளுமைத் திறனும், பகுத்தறிவுப் பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும். சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன். மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன். சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைத்திட இந்த நாளில் உறுதியேற்கிறேன் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி ஏற்க அனைத்து அலுவலர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பூங்கோதை மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News