ஜெயங்கொண்டம் அருகே சிறுமிக்கு பாலியல் தாெந்தரவு: ஒருவருக்கு 5 ஆண்டு சிறை

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியிடம் பாலியல் சீண்டல் புரிந்த நபருக்கு 5 ஆண்டு சிறை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம்.

Update: 2022-06-15 13:29 GMT

பாண்டியன்.

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியிடம் பாலியல் சீண்டல் புரிந்த நபருக்கு 5 ஆண்டு சிறை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம்.

கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் ஜெயங்கொண்டம் அருகே 13 வயது சிறுமியிடம் பாண்டியன் (47) த/பெ கலியமூர்த்தி என்பவர் வலுக்கட்டாயமாக பாலியல் சீண்டல் செய்துள்ளார். அவரிடமிருந்து தப்பித்து சென்ற சிறுமியிடம் இதை யாரிடமாவது கூறினால் உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணையில் பாண்டியன் என்பவர் சிறுமியை பாலியல் சீண்டல் செய்து, வலுக்கட்டாயமாக மானபங்கம் செய்ய முற்பட்டார், என்பதனை அரியலூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுமதி தகுந்த ஆதாரங்களுடன் சமர்ப்பித்தார்.

இதனடிப்படையில் இன்று அரியலூர் சிறப்பு மகிளா விரைவு நீதிமன்றம் குற்றவாளியான பாண்டியனுக்கு சிறுமியை பாலியல் சீண்டல் செய்த குற்றத்திற்காக 5 ஆண்டுகள் சிறை காலம் மற்றும் 10,000 ரூபாய் அபராதமும் விதித்து தண்டனை வழங்கியது. அபராதம் கட்ட தவறும் பட்சத்தில் மேலும் ஒரு ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

Tags:    

Similar News