செந்துறை வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

செந்துறை வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டு மக்களுக்கு மோர் மற்றும் ஜூஸ் வழங்கப்பட்டது.

Update: 2022-05-21 13:53 GMT

செந்துறை வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் கட்டளைப்படியும், அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் போக்குவரத்து துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர் ஆலோசனைப்படி இன்று ( 21-5-2022) ஆர். எஸ். மாத்தூர் பேருந்து நிலையம் அருகில் குழுமூர் ஒன்றிய கவுன்சிலரும், ஒன்றிய ஆதிதிராவிடர் அணி அமைப்பாளருமான ம. ரெங்கநாதன் ஏற்பாட்டில், ஒன்றிய  கழக செயலாளர் மு. ஞானமூர்த்தி தண்ணீர் பந்தல் திறந்து, லெமன் ஜூஸ், மோர்,ரோஸ்மில்க் மற்றும் தர்பூசணி வழங்கினார்.

மாவட்ட இலக்கிய அணி பொருளாளர் ஆர். விசுவநாதன், வி. தொ. அணி. அமைப்பாளர் புலேந்திரன், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் இர. ஆனந்த்ராஜ்,கஞ்சமலைப்பட்டி கிளைக்கழக செயலாளர் இரா. கோடி, சி. நன்னன் , துளார் ஜெய்க்குமார், கழக நிர்வாகிகள் எம். ஆர். ராமலிங்கம், லெச்சுமணன், அப்துல்லா, சக்திவேல் , மகாலிங்கம், இளங்கோவன், முத்துசாமி , திலீபன், நன்தியன்குடிக்காடு இளங்கோவன், நல்லுசாமி, பழனிவேல், அகத்தியர் , நல்லத்தப்பி, எம். கே. பரமசிவம், கடலரசன், திருமூர்த்தி, சித்திரன், நெடுமாறன், அசாவீரன்குடிக்காடு ஆனந்த்,மற்றும் கழக முன்னோடிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags:    

Similar News