அரியலூர் பாதுகாப்பு பணியில் ஆயிரம் போலிசார்

அரியலூர் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறை எண்ணிக்கை குறித்து காவல் கண்காணிப்பாளர்

Update: 2021-05-01 02:25 GMT

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்பி பாஸ்கரன் 

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்பி பாஸ்கரன் விடுத்துள்ள செய்திகுறிப்பில்,

அரியலூர் மாவட்டத்தில் கீழப்பழுவூரில் மே 2 ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணும் தினத்தன்று தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் மொத்தம் 400 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட உள்ளனர். மேலும் 72 எல்லை பாதுகாப்பு படையினர் வீரர்கள் வாக்கு எண்ணும் மையத்தில் பணியில் ஈடுபட உள்ளனர்.

அரியலூர் மாவட்டம் முழுவதும் 600க்கும் மேற்பட்ட காவல்துறையினர், நெடுஞ்சாலை ரோந்து வாகன காவல்துறையினர், ஞாயிற்றுக்கிழமை(மே-2) முழு ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.  அரியலூர் மாவட்ட எல்லைகளில் உள்ள 6 சோதனைச் சாவடிகள் மற்றும் மாவட்டத்தின் உள்ளே உள்ள 6 சோதனைச் சாவடிகளிலும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.

பொதுமக்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வருவதை தவிர்த்து, முழுஊரங்கிற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று அரியலூர் மாவட்ட எஸ்பி பாஸ்கரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News