அரியலூர்: பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞருக்கு வாழ்நாள் ஆயுள் தண்டனை

அரியலூர் அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Update: 2021-11-24 13:32 GMT

சித்தரிக்கப்பட்ட படம்

அரியலூர் அடுத்த ஒட்டக்கோவில் காலனித்தெருவைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (24). இவர், கடந்த 2018 ம் ஆண்டு, பக்கத்து வீட்டில் வசிக்கும் 16 வயது மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி, திருச்சிக்கு அழைத்துச்சென்று திருமணம் செய்து, அங்கேயே தங்க வைத்து குடும்பம் நடத்தியுள்ளார். இதனால் மாணவி கர்ப்பமடைந்துள்ளார்.

இந்நிலையில், மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், அதே ஆண்டில் தட்சிணாமூர்த்தியை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இதற்கு உடந்தையாக இருந்த தட்சிணாமூா்த்தியின் அக்கா செல்வி, அவரது கணவர் பெரியசாமி ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன், சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்து கர்ப்பமாக்கிய தட்சிணாமூர்த்திக்கு  வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனையும், ரூ.40,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும், மாணவிக்கு ரூ. 5 லட்சம் நிவாரண தொகை வழங்க அரசுக்கு உத்தரவிட்டார். குற்றம் நிரூபிக்கப்படாததால் செல்வி மற்றும் அவரது கணவர் பெரியசாமி விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் போலீசார் தரப்பில் அரசு வழக்கறிஞர் ராஜா ஆஜராகி வாதாடினார்.

Tags:    

Similar News