கூடுதல் பேருந்து இயக்க கோரி பள்ளி, கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

அரியலூர் மாவட்டம் திருமானூரில் காலை, மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க கோரி பள்ளி, கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்.

Update: 2022-04-18 13:21 GMT

திருமானூரில் காலை, மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கக் கோரி பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர்.


அரியலூர் மாவட்டம் திருமானூரில், காலை,மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கக்கோரி பள்ளி,கல்லூரி மாணவர்கள் பேருந்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர்.

கடந்த 4 நாட்களாக விடுமுறை என்பதால், சொந்த ஊர் திரும்பியிருந்த பள்ளி,கல்லூரி மாணவர்கள், அலுவலகங்களில் வேலை செய்வோர் என அனைவரும் இன்று காலை பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்கு திரும்பினர். இதனால் அனைத்து பேருந்துகளும் இன்று காலை கூட்டமாக காணப்பட்டது. இதனால் சில பேருந்துகள் பேருந்து நிறுத்தங்களில் நிற்கமலேயே சென்றது. சில பேருந்துகள் பேருந்து நிறுத்தத்தை தாண்டி சிறிது தூரம் சென்று நின்று சென்றது.

இதனால் ஆத்திரமடைந்த மாணவ,மாணவிகள் அரியலூர் மாவட்டம் திருமானூர் பேருந்து நிலையத்தில், அவ்வழியே சென்ற அரசு பேருந்தை சிறைபிடித்து நிறுத்தத்தில் ஏன் நிற்காமல் செல்கிறீா் எனவும், மாணவர்கள் பள்ளி,கல்லூரி சென்று வரும் வகையில் காலை, மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். தகவலறிந்து வந்த திருமானூர் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து மாணவ,மாணவிகள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News