மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை: அரியலூர் கலெக்டர் வேண்டுகோள்

மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பித்து பயன்பெறுமாறு அரியலூர் கலெக்டர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

Update: 2021-09-29 06:16 GMT

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2021-2022ஆம் நிதியாண்டிற்கான மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித்தொகை மற்றும் பார்வையற்ற மாணவ மாணவியர்கள் வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கிட தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கான ஓர் ஆண்டுக்கு கல்வி உதவித்தொகையாக 1 ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை - ரூ.1000/-6 ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை - ரூ.3000/-.9 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை - ரூ.4000/-.தொழிற் பயிற்சி மற்றும் பட்டய படிப்பிற்கு - ரூ.4000/-இளங்கலை பட்ட படிப்பிற்கு - ரூ.6000/-முதுகலை பட்ட படிப்பு மற்றும் தொழில் படிப்பிற்கு - ரூ.7000/- வழங்கப்படுகிறது.

மேலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு - 9 முதல் 12ஆம் வகுப்பு,தொழிற் பயிற்சி மற்றும் பட்டய படிப்பிற்கு ரூ.3000/- மற்றும் இளங்கலை பட்டபடிப்பு மாணவர்களுக்கு ரூ.5000/- மற்றும் முதகலை பட்டபடிப்பு மாணவர்களுக்கு ரூ.7000/- வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

2021-2022 அம் நிதியாண்டு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயனடைய மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள அரசுப்பள்ளிகள் / தனியார் பள்ளிகள், அரசு / அரசு உதவிப்பெறும் கல்லூரிகள் பயிற்சி நிலையங்களில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்கள் முந்தைய கல்வி ஆண்டு இறுதி தேர்வில் குறைந்த பட்சமாக 40 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

மாணவ மாணவியர் பிறத்துறைகளில் கல்வி உதவித்தொகை பெற வில்லை என தலமையாசிரியர் / கல்லூரி முதல்வரால் சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும்.

2021-2022ஆம் நிதியாண்டிற்கு இம்மாவட்டத்தில் பயிலும் தகுதியான மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்கள் கல்வி உதவித்தொகை பெற உரிய விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள அறை எண் 17, தரைத்தளம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில்; மேற்காணும் சான்றுகளுடன் வங்கி கணக்கு புத்தக நகலுடன் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News