பராமரிப்பு பணிகளுக்காக சாத்தமங்கலம் நாளை மின் வினியோகம் நிறுத்தம்
சாத்தமங்கலம் துணைமின்நிலையத்தில் பராமரிப்பு பணிகளுக்காக நாளை காலை 9 மணி முதல் பணிகள் நிறைவடையும் வரை மின்தடை.
அரியலூர் மாவட்டம் சாத்தமங்கலம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (மார்ச் 11) நடைபெறுவதால் மின் வினியாகம் நிறுத்தப்படுகிறது.
இதனால், சாத்தமங்கலம், வெற்றியூர், கள்ளுர், சேனாபதி, முடிகொண்டான், கீழகாவட்டாங்குறிச்சி, கரைவெட்டி, திருமானூர், ஏலாக்குறிச்சி, கீழக்கொளத்தூர், கோவிலூர், சின்னப்பட்டாக்காடு, மாத்தூர், காமரசவல்லி, குருவாடி, தூத்தூர், அன்னிமங்கலம், அரண்மனைக்குறிச்சி, கீழராமநல்லூர், திருமழபாடி, கண்டராதித்தம், புதுக்கோட்டை, வைப்பூர், மேலராமநல்லூர், இலந்தைகூடம், வண்ணம்புத்தூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பணிகள் நிறைவடையும் வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.