தூர்வாரப்படும் ஏரிகள் மற்றும் வாய்க்கால்களின் பட்டியல் வெளியிட கோரிக்கை

அரியலூர் மாவட்டத்தில் தூர்வாரப்படும் ஏரிகள் வாய்கால்களின் பட்டியலை வெளியிட அகிலஇந்திய மக்கள் சேவை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2022-04-28 11:38 GMT

தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை தூர்வார தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது விவசாயிகள் மகிழ்ச்சியை அளித்துள்ளது. அரியலூர் மாவட்டத்தில் 2322 நீர்நிலைகள் உள்ளது. அவற்றில் எந்தெந்த ஏரிகளில் ஆக்கிரமிப்பு உள்ளதோ அதனை மீட்டு அவற்றில் கரைகளை பலப்படுத்திட வேண்டும். இதுபோன்று ஏரி, குளங்களில் உள்ள வண்டல் மண்ணை எடுக்க விவசாயிகளுக்கு உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும். அப்போது தான் அந்த நீர்நிலைகளில் மழைதண்ணணீர் தேங்கி விவசாயிகள் பயன்பாட்டிற்கு வரும்.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் வாயிலாக பொதுமக்கள் விவசாயிகள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள எந்தெந்த ஊரில் நீர்நிலைகள் தூர்வார உள்ளனர் என்பதனையும், மாவட்டத்தில் எந்தந்த ஏரி குளங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது என்பதையும், மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி அறிக்கையாக தர வேண்டும் என அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News