சுவர் விழுந்து இறந்தவர்களது வாரிசுதாரர்களுக்கு நிவாரண உதவி

தமிழக அரசின் சார்பில் வாரிசுதாரர்களுக்கு 8 லட்சம் ரூபாய் நிவாரண உதவி தொகைக்கான உத்திரவினை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ வழங்கினார்

Update: 2021-11-21 04:13 GMT

8லட்சம் ரூபாய் நிவாரண உதவி தொகைக்கான உத்திரவினை,வட்டாட்சியர் ஆனந்தன் முன்னிலையில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் வழங்கினார்.


ஜெயங்கொண்டம் நகர்,தேவாங்கத் தெருவை சேர்ந்த லெட்சுமி அம்மாள் மற்றும் அஜீத் ஆகியோர் இடி தாக்கியதால்  சுவர் விழுந்து இறந்தனர்.

இதனையடுத்து, தமிழக அரசின் சார்பில் அவர்களது வாரிசுதாரர்களுக்கு,தலா 4.00 லட்சம் வீதம் 8.00 லட்சம் ரூபாய் நிவாரண உதவி தொகைக்கான உத்திரவினை, ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் ஆனந்தன் முன்னிலையில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் வழங்கினார்.

Tags:    

Similar News