கொரோனா கட்டுப்பாடு தளர்வு பற்றி அரியலூர் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

கொரோனா கட்டுப்பாடு தளர்வு பற்றி அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

Update: 2022-03-04 06:55 GMT

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரியலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் உத்தரவுபடி கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசாணை எண்: 75வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறைநாள் 15.02.2022 ன்படி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.

மேலும், நோய்த் தொற்று பரவலை கட்டுக்குள் வைத்திட 03.03.2022 முதல் 31.03.2022 வரை கீழ்கண்ட செயல்பாடுகள் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படுகிறது. திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 500 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும். இறப்பு சார்ந்த நிகழ்வுகள் 250 நபர்களுடன் நடத்த அனுமதிக்கப்படும்.

இதுவரை நடைமுறையில் இருந்து வந்த சமுதாய கலாச்சாரமற்றும் அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்படிருந்த தடை 03.03.2022 முதல் நீக்கப்படுகிறது.

அரியலூர் மாவட்டத்தில் மேற்சொன்ன இரண்டுகட்டுப்பாடுகள் தவிர்த்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக விதிக்கப்படிருந்த இதர கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படுகின்றன.

அரியலூர் மாவட்டத்தில் மக்களின் வாழ்வாதாரம் கருதி அரசால் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் பொது இடங்களில் தொடர்ந்து கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியினை கண்டிப்பாககடைப்பிடிக்க வேண்டும். மேலும் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் இரண்டு தவணை தடுப்பூசியினை செலுத்திக் கொள்ளவேண்டும். பொதுமக்கள் நலன் கருதி கொரோனா தொற்றிலிருந்து மக்களை காத்திட அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News