அரியலூர் மாவட்டத்தில் திங்கட்கிழமை தோறும் "பதிவு குறை தீர்க்கும் முகாம்"

திங்கட்கிழமை தோறும் "பதிவு குறை தீர்க்கும் முகாம்"அரியலூர் மாவட்டப்பதிவாளர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.

Update: 2021-10-13 05:58 GMT

அரியலூர் மாவட்டத்தில் பதிவுத் துறையில் பொதுமக்களிடமிருந்து பதிவு தொடர்பாக புகார்கள் அதிக எண்ணிக்கையில் பெறப்பட்டு வருகின்றன. சொத்து பதிவு தொடர்பான புகார்களை பொதுமக்கள் பெரும்பாலும் நேரடியாகவே அளிக்க விரும்புவதால் திங்கட்கிழமை தோறும் "பதிவு குறை தீர்க்கும் முகாம்" வாரந்தோறும் அரியலூர் மாவட்டப்பதிவாளர் (நிர்வாகம்) மாவட்டப்பதிவாளர் அலுவலகத்தில் நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

எனவே, மேற்படி முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News