ரமலான் பண்டிகை: அரியலூர் வாரச்சந்தையில் ஆடு விற்பனை மந்தம்

அரியலூர்- ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஆடு விற்பனை மந்தம் களையிழந்த வாரச்சந்தை.

Update: 2022-05-01 05:18 GMT

ஜெயங்கொண்டம் அருகே உள்ள குறுக்குரோட்டில் வார சந்தையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆடு விற்பனை குறைவாக நடந்ததால் உரிமையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள குறுக்குரோட்டில் வார சந்தையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆடு விற்பனைக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வராததால் வியாபாரம் இல்லாமல் களையிழந்ததால் உரிமையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

வருகின்ற 3ம் தேதி இஸ்லாமியர்களின் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்கள் நோன்பு கடைபிடித்து, ரமலான் முதல் நாளில் இரவு பிறை தெரிந்தவுடன் வழிபாடு செய்து, ரமலான் அன்று ஆட்டு இறைச்சியை தானமாக வழங்கி கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் குறுக்கு ரோட்டில் நடைபெரும் வாரச்சந்தையில் இன்று வழக்கத்தை விட குறைவாகவே ஆடுகள் விற்பனைகாக வந்துள்ளது. இதில் ஆண்டிமடம், காட்டுமன்னார்கோயில், ஜெயங்கொண்டம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரத்திற்காக பொதுமக்கள் ஆடுகளை வாகனங்களில் கொண்டு வந்தனர். அதிகாலை முதலே சந்தையில் ஆடுகள் விற்பனை துவங்கியது. இதில் வியாபாரிகள் பொதுமக்கள் என சுமார் 100பேர் மட்டுமே வந்து இருந்தனர்.

ரம்ஜான் பண்டிகை நாளில் மட்டும் குறுரோடு வார சந்தையில் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை ஆவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டில் அதிக அளவில் வியாபாரிகள் வராததால் 30 லட்சத்துக்கு மட்டுமே ஆடுகள் விற்பனைக்கு ஆகியது. இதனால் இந்த வார சந்தையில் வியாபாரம் சரிந்தது என வருத்தத்துடன் பொதுமக்கள் தெரிவித்தனர். கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு ரமலான் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ள நிலையில் வாரச்சந்தையில் ஆடுகளின் விற்பனை எதிர்பார்த்த அளவிற்கு நடைபெறாததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News