கனமழையால் நிரம்பும் அரியலூர் மாவட்ட ஏரி, குளங்கள்

தொடரும் கனமழையால் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன.

Update: 2021-10-12 05:21 GMT

அரியலூர் தாலுக்காவில் மட்டும் இரண்டு நாளிள் 20 செ.மீ மழை பதிவாகி உள்ளது குறிபிடதக்கது. அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட இருசுகுட்டை அருகே பாத்திமா நகரில் குட்டையில் இருந்து தண்ணீர் தெருவில் தோங்கியது. இதனால் அந்த தெருவில் உள்ள வீடுகளுக்கு முன்பு மழை நீர் தேங்கியது. எனவே மழை நீரை வெளியேற்ற வேண்டும் என போது மக்கள் நகராட்சி நிர்வாகத்தை முறையிட்டும்‌ அவர்கள் நடவடிக்கு எடுக்காததால் தேங்கிய மழை நீரில் நின்று பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டதில் இரண்டு நாளாக கனமழை பெய்து வருகிறது பல கிராமங்களிள் ஏரி குளம் நிரம்பிவருகிறது விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். செந்துறை பகுதியில் கடந்த 3 நாட்களில் 100 மிமீ அளவிற்கு வரலாறு காணாத புரட்டாசி மாதத்தில் கொட்டி தீர்த்த தென்மேற்கு பருவ மழை ஏரி குளங்கள் நிரம்பி வழிகிறது.

அரியலூர் மாவட்ட மழையளவு

அரியலூர் - 100.6மிமீ

ஜெயங்கொண்டம் - 60மிமீ

செந்துறை - 20மிமீ

திருமானூர் - 74.2மிமீ

ஆண்டிமடம் - 31மிமீ

Tags:    

Similar News