அரியலூர் அருகே சாலையில் உள்ள பள்ளத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
அரியலூர் அருகே காத்தான்குடிகாடு கிராமத்தில் சாலையில் உள்ள பெரிய பள்ளத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அரியலூரிலிருந்து கல்லங்குறிச்சி, தேளூர், காத்தான்குடிகாடு வழியாக இரும்புலிக்குறிச்சி வரை தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிராம தார்சாலை வழியாக அரசு பஸ்களும், மினி பஸ்களும் சென்று வருகின்றன. இந்த நிலையில் காத்தான்குடிகாடு கிராமத்தில் உள்ள அங்கன்வாடி அருகே தார் சாலையில் பெரிய அளவில் பள்ளம் உள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் வெளியூர் வாசிகள் இரவு நேரங்களில் இந்த வழியாக செல்லும்போது நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிககை எடுக்க வேண்டும் என இப்பகுதி கோரிக்கை வைத்துள்ளனர்.