உடையார்பாளையம் கல்வி மாவட்டத்தை இடமாற்றம் செய்வதை கண்டித்து கடையடைப்பு

Today Strike News -உடையார்பாளையம் கல்வி மாவட்டத்தை இடமாற்றும் செய்வதை கண்டித்து கடையடைப்பு போராட்டத்தால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Update: 2022-09-28 06:57 GMT

 உடையார்பாளையம் கல்வி மாவட்டத்தை இடமாற்றும் செய்வதை கண்டித்து நடத்தப்பட்ட  கடையடைப்பு  போராட்டம் 

Today Strike News -25 ஆண்டுகளாக இயங்கி வரும் உடையார்பாளையம் கல்வி மாவட்டத்தை இடமாற்றும் செய்வதை கண்டித்து கடையடைப்பு மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தில் கடந்த 25 ஆண்டுகளாக உடையார்பாளையம் கல்வி மாவட்டமாக இயங்கி வருகிறது. இந்நிலையில், உடையார்பாளையம் கல்வி மாவட்டத்தில் இயங்கி வரும் அலுவலகத்தை அரியலூர் மாவட்டத்திற்கு இடம் மாற்றுவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் உடையார்பாளையம் தாலுகாவில் உள்ள அலுவலக இடம் மாற்றம் செய்ய கூடாது என அனைத்து கட்சிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கடையடைப்பு ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் உடையார்பாளையம் பகுதி மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளது. 100 -க்கும் மேற்பட்ட கடைகள் இந்த கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. அத்தியாவசிய கடைகளான பால் மருந்து மற்றும் காய்கறி கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்த கடை அடைப்பு போராட்டத்திற்கு வணிக சங்கம் முழு ஆதரவு தெரிவித்துள்ளனர். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாத பச்சத்தில் அடுத்தகட்ட போராட்டம் நடத்துவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News