அரியலூரில் மின் சேமிப்பு வார விழா விழிப்புணர்வு பேரணி
அரியலூரில் மின் சேமிப்பு வாரவிழாவையொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
அரியலூரில் மின் சேமிப்பு வாரவிழாவையொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
அண்ணா சிலை அருகே தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியை மின்வாரிய அரியலூர் செயற்பொறியாளர் சாமிதுரை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் மின்சார சேமிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாதைகளை மின்வாரிய அலுவலர்கள், பணியாளர்கள் கைகளில் ஏந்தியபடி கடைவீதி வழியாக திருச்சி சாலையில் சென்று ஒற்றுமை திடலை அடைந்தனர்.
பேரணியில் உதவி செயற்பொறியாளர்கள் சுப்பிரமணியன், ராஜேந்திரன், பொன்சங்கர், உதவி பொறியாளர்கள் புவனேஸ்வரி, ரேவதி, ராஜா மற்றும் பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.