கஞ்சா விற்ற நபரை கைது செய்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார்

Cannabis Drug - ஒரு இருசக்கர வாகனம், 1.5 கிலோ கஞ்சா மற்றும் தப்பி ஓடியவர்கள் விட்டுச் சென்ற 4.5 கிலோ கஞ்சா வை போலீஸார் பறிமுதல் செய்தனர்

Update: 2022-07-23 06:18 GMT

போலீஸாரால் கைது செய்யப்பட்ட கஞ்சா வியாபாரி கோகுல் ராஜ்

Cannabis Drug -கஞ்சா விற்ற நபர் கைது அவரிடம் இருந்து 6 கிலோ கஞ்சா பறிமுதல்.

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி,அருகே உள்ள சொக்கலிங்கபுரம் கிராமம் கோழி பண்ணை அருகே கஞ்சா வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, உதவி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் மேற்கொண்டனர். அப்போது சொக்கலிங்கபுரம் காலனி தெருவை சேர்ந்த முனுசாமி மகன் கோகுல்ராஜ் (32) என்பவர் சொக்கலிங்கபுரம் கோழி பண்ணை அருகே இரண்டு நபர்களுடன் சேர்ந்து கஞ்சாவை பொட்டலங்களை பிரித்துக் கொண்டிருந்தார்.

காவல்துறையினரை கண்டதும் மூவரும் தப்ப முயற்சி செய்தனர். இதில் கோகுல் ராஜை காவல்துறையினர் மடக்கி பிடித்து அவரிடம் இருந்து ஒரு இருசக்கர வாகனம், 1.5 கிலோ கிராம் கஞ்சாவையும் மற்றும் தப்பி ஓடியவர்கள் விட்டுச் சென்ற 4.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.தப்பி ஓடிய இரண்டு நபர்களை குறித்து மீன்சுருட்டி (பொ) காவல் ஆய்வாளர் முத்துக்குமார் விசாரணை செய்து வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News