அரியலூர் மாவட்டத்தில் நாளை பட்டா பிழை திருத்த சிறப்பு முகாம்

அரியலூர் வட்டம் இராயம்புரம் வருவாய் கிராமத்தில் நாளை புதன்கிழமை பட்டா பிழை திருத்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

Update: 2021-11-09 15:41 GMT

அரியலூர் மாவட்டம் அரியலூர் வட்டம் இராயம்புரம் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட கிராமங்களில் 10-11-2021 புதன்கிழமை பொதுமக்கள் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பட்டா சிட்டாவில் உள்ள பிழை திருத்தத்தை சரி செய்து கொள்ளலாம்.

நிலத்தின் சர்வே எண், துணை கோட்ட எண்ணில் தவறான பதிவுகளை நீக்குதல், நீட்டிக்கப்பட்ட திருத்தம், பட்டாதாரரின் பெயர் திருத்தம், பட்டாதாரரின் தந்தை பெயர், பாதுகாவலரின் பெயர்களில் திருத்தம், நில உரிமையாளரின் உறவுமுறை தொடர்பான திருத்தம், காலியாக உள்ள பத்திகளில் திருத்தம், பட்டாதாரரின் பகுதி, பெயர் அருகே உள்ள பட்டாதாரரின் பெயரில் இருப்பதை திருத்துதல் உள்ளிட்ட சிறிய அளவிலான பிழைகள் திருத்தம் செய்யப்படும்.

இந்த தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News