அரியலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறப்பு

செந்துறை வட்டம், குழுமூர், தளவாய், கூடலூர் ஆகிய இடங்களில் உள்ள கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகளை விற்பனை செய்யலாம்.

Update: 2021-09-07 08:48 GMT

பைல் படம்

அரியலூர் மாவட்டத்தில் 2020-2021 -ஆம் ஆண்டில் கரீப் சாகுபடி மூன்றாம் பருவத்தில் நடைபெறும் அறுவடையை முன்னிட்டு, விவசாயிகள் பயன்பெறும் வகையில், நான்காம் கட்டமாக, அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டத்தில், குழுமூர் மற்றும் தளவாய் கூடலூர் ஆகிய கிராமங்களில்  9.9.2021 முதல்நேரடி கொள்முதல் நிலையம் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆகவே,  செந்துறை வட்டத்தில் குழுமூர் மற்றும் தளவாய் கூடலூர் ஆகிய கிராமங்களில் திறக்கப்படும் நேரடி கொள்முதல் நிலையங்களில்  இப்பகுதி விவசாயிகள் தங்களது நெல்மூட்டைகளை விற்பனை செய்து  பயன்பெறலாம் என அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News