அரியலூர் மாவட்டத்தில் 10 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் இன்று திறப்பு

அரியலூர் மாவட்டத்தில் 10 கிராமங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் இன்று திறக்கப்பட உள்ளது.

Update: 2022-02-15 14:01 GMT

பைல் படம்.

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரியலூர் மாவட்டத்தில் கரீப் KMS 2021-2022 சம்பா பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெல்லினை கொள்முதல் செய்வதற்கு இரண்டாம் கட்டமாக அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தில் இடங்கண்ணி, வாழைக்குறிச்சி, முட்டுவாஞ்சேரி, அருள்மொழி, பிள்ளைப்பாளைம், கார்குடி, கோவிந்தபுத்தூர் ஆகிய 7 கிராமங்கள், அரியலூர் வட்டத்தில், ஏலாக்குறிச்சி, குலமாணிக்கம் ஆகிய 2 கிராமங்கள் மற்றும் செந்துறை வட்டத்தில் த.கூடலூர் ஆகிய 1 கிராமம் ஆக மொத்தம் 10 கிராமங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட கிராமங்களில் 16.02.2022 முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளதால், அருகில் உள்ள விவசாயப் பெருமக்கள், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News