அரியலூர் மாவட்டத்தில் இன்று கொரோனாக்கு ஒருவர் உயிரிழப்பு

அரியலூர் மாவட்டத்தில் இன்றுவரை 16,606 பேர் பாதிக்கப்பட்டு, 254 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2021-09-20 15:16 GMT

பைல் படம்.

அரியலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் கொரோனாவால் 10 பேர் பாதிக்கப்பட்டு, ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று குணமடைந்து வீடுதிரும்பியர்வர்கள் 12 பேர். மருத்துமனைகளில் 133 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றுவரை 16,606 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 16,219 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 254 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 857 பேர். இதுவரை 3,02,556 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 16,606 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 2,85,950 பேர்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 12,249. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 5,96,751. அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 38,948 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1,831 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 37,019 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 98பேர்.

Tags:    

Similar News