"ஒரு நாள் எம்.எல்.ஏ" வி.ஏ.ஓ.விற்கு தற்காலிக பதவி தந்த அமைச்சர்

நாளைக்கு நீ "ஒருநாள் எம்.எல்.ஏ" என கிராம நிர்வாக அலுவலருக்கு தற்காலிக பதவி தந்தார் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.

Update: 2021-12-26 13:20 GMT

அமைச்சர் சிவசங்கர் வாய்க்கால் பிரச்சினை பற்றி பொதுமக்களிடம் பேசினார்.

பெருசா வெட்டிடாத, லேசா தண்ணீர் ஓடுற மாதிரி கம்ப்ளீட்டா வெட்டி விடு. நாளைக்கு நீ "ஒருநாள் எம்.எல்.ஏ"  என் சார்பில் இருந்து பணியை பார்த்துக்க என அருகிலிருப்பவரிடம் சொல்கிறார் ஒரு சட்டமன்ற உறுப்பினர்.

சரிங்க என பதில் வருகிறது. பதிலாய், மக்கள் கூட்டத்திலிருந்து மகிழ்ச்சியோடு சிரிப்பலை எழுகிறது.

ஏதோ தெருவாசி ஒருவர், தம் பகுதி பிரச்சினையை பக்கத்து வீட்டுக்காரரோடு பேசித் தீர்வு காண்பதுபோல தானே நினைக்கத் தோன்றுகிறது?

ஒரு அமைச்சருக்கும் - அவரை தேர்வு செய்த மக்களுக்குமான உரையாடலே இந்த பதிவு.

அந்த அமைச்சர் குன்னம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட "எஸ்.எஸ்.சிவசங்கர்".

அண்மையில் பெய்த தொடர் மழையினால் மருவத்தூர் பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதை வெளியேற்றி தாருங்கள் என அவரை தேர்வு செய்த மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

பதிலாக மக்களிடம், அவர் பேசியது தான் பதிவின் முதல் பத்தி.

பெருசா வெட்டிடாத, லேசா தண்ணீர் ஓடுற மாதிரி கம்ப்ளீட்டா வெட்டி விடு. நாளைக்கு நீ "ஒருநாள் எம்.எல்.ஏ!" என் சார்பில் இருந்து பணியை பார்த்துக்க என கிராம நிர்வாக அலுவலரிடம் சொல்கிறார்.

அருகிலிருந்த கட்சிக்காரர் நாங்க பாத்துக்கிறோம் என பதிலளிக்க, நாம் செய்தால் ஒரு சார்பாக வேலை நடப்பதாக எதிர்க்கட்சி நினைக்க வாய்ப்புண்டு. ஊர் பொதுவான நபராக இருந்து அவரே செய்யட்டும் என கிராம நிர்வாக அலுவலரை பணிக்கிறார்.

அவரும் சிறப்பாக செய்கிறேன் என்கிறார்.

கூடவே, என் செலவில் ஜே.சி.பி இயந்திரம் அனுப்பி வைக்கிறேன். வண்டி வந்ததும் இங்க பறிக்காத, அங்க பறிக்காதனு சொல்லாம பாத்துக்கனும் என மக்களுக்கு அன்பு வேண்டுகோளும் வைத்து விடை பெறுகிறார் அமைச்சர்.

Tags:    

Similar News