சாத்தமங்கலம் துணைமின்நிலையத்தில் 15ம்தேதி மின்தடை அறிவிப்பு

சாத்தமங்கலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகளுக்காக வரும் 15 ம் தேதி காலை 9.45 மணி முதல் பணிகள் முடியும் வரை மின்தடை ஏற்படும் என அறிவிப்பு.

Update: 2022-07-13 14:00 GMT

பைல் படம்.

இதுகுறித்து திருமானூர் மின் நிலைய உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

அரியலூர் மாவட்டம் சாத்தமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர ஒட்டு மொத்தப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப் படுவதால், வெள்ளிக்கிழமை நாள் 15:7.2022 காலை 9.45 மணி முதல் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

சாத்தமங்கலம், வெற்றியூர், கள்ளூர், சேனாபதி, முடிகொண்டான், கிழகாவட்டான்குறிச்சி, கரைவெட்டி, திருமானூர், ஏலாக்குறிச்சி, கீழக்கொளத்தூர், கோவிலூர், சின்னப்பட்டாக்காடு, மாத்தூர், காமரசவல்லி, குருவாடி, தூத்தூர், அன்னிமங்கலம், அரண்மனைக்குறிச்சி, திருமழப்பாடி, கண்டிராதித்தம், புதுக்கோட்டை, வைப்பூர், மேலராமநல்லூர், கிழராமநல்லூர், இலந்தக்கூடம், வண்ணம்புத்தூர்.

Tags:    

Similar News