சத்துணவு காலி பணியிடங்கள் நிரப்புவது தொடர்பான நடவடிக்கை ரத்து

சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்கள் நிரப்புதல் தொடர்பான அறிவிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-11-11 12:05 GMT

கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி 

அரியலூர் மாவட்டத்தில், சத்துணவு திட்டத்தின் கீழ் 6 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக இருந்த, 143 சத்துணவு அமைப்பாளர் பணியிடங்கள், 58 சமையலர் பணியிடங்கள் மற்றும் 289 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு, அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவரின் அறிவிக்கை வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கொரோனா தொற்று நடவடிக்கைகள் காரணமாக,  அரசின் உத்தரவுகளின்படி காலி பணியிடங்கள் நிரப்பும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது நிர்வாக காரணங்களுக்காக நாளது தேதி வரையில், மேற்கண்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.

இந்நிலையில்,  சென்னை சமூக நலன் (மற்றும்) மகளிர் உரிமைத்துறை வழிகாட்டுதலின்படி, சத்துணவு காலிப்பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக, அரியலூர் மாவட்டத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிக்கை மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளை ரத்து செய்து, அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கை ரத்து செய்வது குறித்து, விண்ணப்பதாரர்களிடம் இருந்து பெறப்படும் எவ்வித மேல்முறையீடுகளும் பரிசீலிக்கப்படமாட்டாது. மேலும், சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்கள் நிரப்புதல் தொடர்பான அறிவிக்கை பின்னர் தனியே வெளியிடப்படும் என,  மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News