உச்சநீதிமன்றத்தையோ, தேர்தல் ஆணையத்தையோ சந்திப்பதற்கான வாய்ப்பு இல்லை - வைத்தியலிங்கம்

தற்போதுள்ள சூழ்நிலையில் உச்சநீதிமன்றத்தையோ, தேர்தல் ஆணையத்தையோ சந்திப்பதற்கான வாய்ப்பு இல்லை: ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம்.

Update: 2022-06-24 14:18 GMT

ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் அரியலூரில் தவத்தாய் குளம் அருகே ரவுண்டானா சந்திப்பில் செய்தியாளர்களை சந்தித்தார்.

சென்னையிலிருந்து தஞ்சைக்கு சென்ற ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் அரியலூரில் தவத்தாய் குளம் அருகே ரவுண்டானா சந்திப்பில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தற்போது உள்ள சூழ்நிலையில் உச்சநீதிமன்றத்தையோ, தேர்தல் ஆணையத்தையோ சந்திப்பதற்கான வாய்ப்பு இல்லை. மூன்று, நான்கு நாட்களுக்கு பிறகு கட்சியை எவ்வாறு வழிநடத்தி செல்வது என்பது குறித்து ஆராய்ந்த பின் முடிவு செய்யப்படும்.

கட்சிப் பிரச்சனையில் நீதிமன்றம் தலையிட்டு வந்துள்ளது. பொதுக்குழு சம்பந்தமான பிரச்சனைகளில் நீதிமன்றம் தான் தலையிட்டது. கட்சிப் பிரச்சனைகளில் தேர்தல் ஆணையமும் தலையிடும். கட்சி பிரச்சனைகளில் நீதிமன்றமோ, தேர்தல் ஆணையமோ தலையிட முடியாது என்று சொல்ல முடியாது. சசிகலாவை சந்திப்பது குறித்து கேட்டபோது இந்த கேள்விக்கு தற்போது பதில் இல்லை என கூறினார்.

முன்னதாக அரியலூர் வந்த ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கத்திற்கு அதிமுக கட்சியினர் வெடி வெடித்து பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளித்தனர். மேலும் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.ராமச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News