அரியலூர் மாவட்டத்தில் புதிய மின்மாற்றி மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது

அரியலூர் மாவட்டத்தில் புதிய மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்கு சின்னப்பா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

Update: 2021-10-27 05:28 GMT

அரியலூர் வடக்கு ஒன்றியம் ராயம்புரம் கிராமத்தில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. இதனையடுத்து புதிய மின்மாற்றி அமைக்க தமிழகஅரசிற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். தமிழகஅரசின் உத்தரவின்பேரில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது.

புதிய மின்மாற்றியை  மக்கள் பயன்பாட்டிற்கு அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா துவக்கி வைத்தார். உடன் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News