அரியலூர்: புதிய பாலம் அமைக்கும் பணியை அமைச்சர் எ.வ வேலு ஆய்வு

திருமானூர் அருகே புதிய பாலம் அமைக்கும் பணியை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2022-03-20 09:29 GMT


ஏலாக்குறிச்சி பிரிவு சாலையில் நடைபெற்று வரும்  பாலம் அமைக்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார் அமைச்சர் எ.வ.வேலு..





அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த முடிகொண்டான் கிராமம் அருகே ஏலாக்குறிச்சி பிரிவு சாலையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை சந்திப்பு மேம்பாடு செய்தல் திட்டத்தின் கீழ் ரூ.1.25 கோடி மதிப்பில் புதிதாக கல்வெட்டு பாலம் மற்றும் சாலை மேம்பாடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியினை மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் 

முதல்வரின் உத்தரவுக்கு இணங்க நான் செல்லும் வழிகளில், சாலைகள் எவ்வாறு உள்ளது என ஆய்வு செய்து வருகிறேன். இன்று (நேற்று) 3 இடங்களில் ஆய்வு செய்தேன். சாலைகள் தரமாக உள்ளது.தற்போதைய பட்ஜெட்டில் ரூ18,000 கோடி பொதுப்பணித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை நடப்பாண்டிலேயே செலவு செய்து சாலை அமைத்தால் தான் தரமாக இருக்கும். கிடப்பில் போடப்பட்டால் மூலப்பொருட்களின் விலை உயர்ந்து விடும். ஒப்பந்ததாரர்கள் குறிப்பிட்ட ஒப்பந்த நாட்களில் பணியினை முடிக்க வேண்டும். முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இருவழிச்சாலைகளை நான்கு வழிச்சாலையாக உயர்த்த நடிவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக 32 இடங்களில் சாலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் - ஜெயங்கொண்டம் சாலையும் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றார்.

ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் உத்தண்டி, உதவி கோட்ட பொறியாளர் சிட்டிபாபு, உதவி பொறிளாளர் இளையபிரபுராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News