கரைவெட்டி கிராமத்தில் அஞ்சலக கிளையை திறந்து வைத்த எம்எல்ஏ
கரைவெட்டி கிராமத்தில் அஞ்சலக கிளையை அரியலூர் எம்எல்ஏ கு.சின்னப்பா திறந்து வைத்தார்.
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம் கரைவெட்டி கிராமத்தில் கிளை அஞ்சலகம் அமைக்க கிராம பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து மத்தியஅரசு கிளைஅஞ்சல் நிலையம் அமைக்க உத்திரவிட்டது.
இன்று அரியலூர் எம்எல்ஏ கு.சின்னப்பா கரைவெட்டி கிராமத்தில் கிளை அஞ்சல் நிலையத்தை திறந்து வைத்தார். மேலும் குத்துவிளக்கேற்றி அஞ்சலகத்தை தொடங்கிவைத்த எம்எல்ஏ சின்னப்பா சந்தாதாரர்களுக்கு அஞ்சலக கணக்கு புத்தகத்தை வழங்கியதோடு, பொதுமக்கள் அஞ்சலகத்தை உரியமுறையில் பயன்படுத்தி பலன் அடையுமாறு கேட்டுக்கொண்டார்.
நிகழ்வில் அஞ்சலக அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய கவுன்சிலர், மற்றும் ஒன்றிய செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.