மாற்றுத்திறனாளிகளுக்கு ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. நலத்திட்ட உதவி

ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Update: 2021-10-27 05:46 GMT

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாமில் பயனாளிகளுக்கு நலஉதவிகளை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் வழங்கினார்.

ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாமினை பார்வையிட்டு, பயனாளிகளுக்கு சக்கர நாற்காலி மற்றும் அடையாள அட்டை உள்ளிட்டவைகள் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சீனிவாசன் மற்றும் ஜெயங்கொண்டம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஆ.பிரபாகரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News