அரியலூர்: மனைப்பட்டா வழங்ககோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மனு

மனைப்பட்டா வழங்ககோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அரியலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

Update: 2022-05-06 12:30 GMT

மனைப்பட்டா வழங்ககோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலம் தழுவிய மனுகொடுக்கும் போராட்டம் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். பல ஆண்டு காலமாக பயன்பாடற்ற நீர்நிலைப் புறம்போக்கு பகுதிகளில் வசிப்போருக்கு பட்டா வழங்கிட வேண்டும். சாத்தியமில்லாத சூழலில், உரிய மாற்று இடத்தை வழங்கிட வேண்டும். கோயில்கள் மற்றும் மடங்களுக்கு சொந்தமான நிலங்களில் குடியிருந்துவரும் மக்களுக்கு மனைப்பட்டா வழங்ககோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மாநிலக்குழு தோழர் எஸ்.வாலண்டினா, மாவட்ட செயற்குழு தோழர்கள் மணிவேல், கிருஷ்ணன், கந்தசாமி, வெங்கடசலம், துரை.அருணன், பரமசிவம், அம்பிகா, மாவட்டக்குழு தோழர்கள் துரைசாமி, அருண்பாண்டியன், மலர்கொடி, மீனா, பத்மாவதி, அர்சுணன், ராதாகிருஷ்ணன், புனிதன் உள்ளிட்ட தோழர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் ஏராளமானோர் பங்கெடுத்தனர்.

Tags:    

Similar News