கீழப்பழுவூரில் கார் திருடிய நபருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை

கீழப்பழுவூரில் டாடா சுமோ திருடிய நபருக்கு மூன்று ஆண்டுகாலம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Update: 2022-06-28 12:57 GMT

ஜெய்சங்கர்.

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரை சேர்ந்த பிரபு என்பவருக்கு சொந்தமான டாடா சுமோ காரை கடந்த 2016ம் ஆண்டு கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியை சேர்ந்த ஜெயா என்கிற ஜெய்சங்கர் (45) என்பவர் திருடிய குற்றத்திற்காக அவர் மீது கீழப்பழுவூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் அரியலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்றம் 2ல் காவல்துறையினர் குற்றவாளிக்கு எதிரான அனைத்து ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை தகுந்த சாட்சிகளுடன் சமர்ப்பித்தனர்.

இதனையடுத்து நீதிமன்றம் குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் 5000 ரூபாய் அபராதம், அபராதம் கட்ட தவறும்பட்சத்தில் மேலும் 6 மாத காலம் தண்டனை அனுபவிக்க வேண்டும் என தண்டனை வழங்கியது.

Tags:    

Similar News