அரியலூர்: கூத்தூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிக்காக நாளை மின்தடை

அரியலூர் மாவட்டம் கூத்தூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப்பணிகளால் நாளை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-25 10:13 GMT

அரியலூர் மாவட்டம் கூத்தூர் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் எம்.செல்ல பாங்கி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கூத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை ( நவ. 26) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9.00 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை கூத்தூர்,அரியலூர் மேற்கு பகுதி, பி.ஆர்.நல்லூர், ஜெமீன் பேரையூர், கூடலூர், குளத்தூர், ராமலிங்கபுரம், ரசுலாபுரம், உசேன்நகரம், அல்லிநகரம், மேலமாத்தூர், வெண்மணி, திம்மூர் மற்றும் மேத்தால் ஆகிய கிராமங்களில் மின்சாரம் இருக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News