சமூக & நல்லிணக்கத்திற்கான 'கபீர் புரஸ்கார் விருது'க்கு விண்ணப்பிக்கலாம்

சமூக மற்றும் நல்லிணக்கத்திற்கான ‘கபீர் புரஸ்கார் விருது'க்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று, அரியலூர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-01-15 07:14 GMT

கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி

இது குறித்து, அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பு: 2022-ஆம் ஆண்டு குடியரசு தின விழாவின் போது சமூக மற்றும் நல்லிணக்கத்திற்காக 'கபீர் புரஸ்கார் விருது" ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சரால் வழங்கப்படுகிறது. இவ்விருதானது மூன்று அளவுகளில் தலா ஒரு நபர் வீதம் மூவருக்கு வழங்கப்படுகிறது.

முறையே ரூ. 20,000/-, ரூ.10,000/- மற்றும் ரூ.5,000/- க்கான காசோலை மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும் தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் (ஆயுதப்படை வீரர்கள், காவல் தீயணைப்புத்துறை மற்றும் அரசு பணியாளர்கள் நீங்கலாக ) அவர்களின் சமூதாய நல்லிணக்க செயல் அவர்கள் ஆற்றும் அரசுப் பணியில் ஒரு பகுதியாக நிகழும் பட்சத்தில் இப்பதக்கத்தினைப் பெற தகுதியுடையவராவர்.

எனவே தகுதியான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இயங்கும் மாவட்ட சமூகநல அலுவலகம், அரை எண் : 20தரைத்தளம், அரியலூர் முகவரில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News