நீதித்துறையில் 3557 பணியிடங்கள் , முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் அரியலூர் கலெக்டர் தகவல்

நீதித்துறையில் 3557 பணியிடங்களுக்கு ஆட்கள் நேரடி தேர்வு மூலம் நியமிக்கப்படவுள்ளனர். இதில் முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் என்று அரியலூர் கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.

Update: 2021-05-27 09:06 GMT

சென்னை உயர்நீதி மன்றம் (கோப்பு படம்)

நீதித்துறை ஆட்சேர்ப்பு பிரிவு மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ளநகல் பிரிவு உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிக்கு 3557 பணியிடங்களை நேரடி தேர்வு மூலம் நிரப்பப்படவுள்ளது. கல்வி தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லுத அதற்கு நிகராக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். https://www.mhc.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் 06.06.2021.ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

எனவே, அரியலூர் மாவட்டத்தில் உள்ள தகுதிபடைத்த முன்னாள் படைவீரர்கள் இப்பணியிடங்களுக்கு பெருமளவு விண்ணப்பித்து பயனடையுமாறும், விண்ணப்பித்த முன்னாள் படைவீரர் அதன் விவரத்தினை 09-06-2021-க்குள் அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர் அலுவலகத்திற்கு (தொலைபேசி எண்.0432-221011) தெரியப்படுத்திடவும்; அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் த.ரத்னாதெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News