அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் 73மி.மீ. மழை அளவு பதிவானது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் 73மி.மீ. மழை அளவு பதிவானது

Update: 2022-01-02 07:04 GMT

அரியலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில், தொடர்ந்து பலமுறை மணிக்கணக்கில் கொட்டித் தீர்த்த கனமழையால், வெள்ளநீர் பெருக்கெடுத்து தெருக்களில் ஓடியது.

நேற்று பெய்த கனமழையில் அரியலூரில் 71.6மி.மீ, திருமானூரில் 27.6மி.மீ, செந்துறையில் 51மி.மீ, ஜெயங்கொண்டம் 73மி.மீ ஆண்டிமடம் 23.2மி.மீ, என மாவட்டம் முழுவதும் 246.4மி.மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது.

Tags:    

Similar News