செந்துறை பேருந்து நிலையம் முன்பு பா.ஜ.க. வினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்டம் செந்துறை பேருந்து நிலையம் முன்பு பா.ஜ.க. வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-01-12 07:12 GMT

அரியலூர் மாவட்டம் செந்துறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர்.

பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்கள் தொடங்கி வைக்கும் வகையில் பஞ்சாப் மாநிலத்துக்கு சென்றபோது பாதுகாப்பு குறைபாடு காரணமாக திரும்பினார்.இது இந்திய அளவில் பெரிய பதற்றத்தை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி முன்கூட்டியே பஞ்சாப் மாநிலத்துக்கு செல்வது தெரிவித்திருந்த போதும், உரிய பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத பஞ்சாப் மாநில அரசுக்கு கண்டனங்களை தெரிவித்துக் கொண்ட பா.ஜ.க*வினர், காங்கிரஸ் ஆளுகின்ற மாநிலமாக இருப்பதால் பிரதமர் மோடியை புறக்கணிக்கும் வகையில் இவ்வாறானநடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி அரியலூர் மாவட்டம் செந்துறை பேருந்து நிலையத்தில்  பா.ஜ.க.வினர்  கண்டன கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் அருண்பிரசாத் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் அய்யப்பன், ஒன்றிய செயலாளர் இளங்கோவன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News