அரியலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு

அரியலூர் மாவட்டம் முமுவதும் தொடர்மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு நாளை ஒருநாள் விடுமுறை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு.

Update: 2021-11-25 15:22 GMT

அரியலூர் மாவட்டம் முமுவதும் பெய்துவரும் தொடர்மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி உத்திரவிட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில், தொடர்ந்து பலமுறை மணிக்கணக்கில் கொட்டித் தீர்த்த கனமழையால், வெள்ளநீர் பெருக்கெடுத்து தெருக்களில் ஓடியது.

இதனையடுத்து மாணவர்களின் சிரமம் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (26.11.202) ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி அளித்துள்ளார்.

Tags:    

Similar News