அரியலூரில் சுதந்திர போராட்ட வீரர் ஜீவா நினைவு நாள் அனுசரிப்பு

அரியலூர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்தில் சுதந்திர போராட்ட வீரர் ஜீவாவின் படத்துக்கு மலர் தூவி மரியாதை

Update: 2022-01-18 12:31 GMT

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்தில் சுதந்திர போராட்ட வீரர் ஜீவாவின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

அரியலூரில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்தில் சுதந்திர போராட்ட வீரர் ஜீவாவின் 59வது நினைவு தினம்  அனுசரிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், ஜீவாவின் படத்துக்கு அக்கட்சியின் சார்பில் மாவட்ட துணைச் செயலாளர் டி.தண்டபாணி தலைமையில் மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. அக்கட்சியினர் மற்றும் சாலையோர தெரு வியாபார தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த பொறுப்பாளர்கள்  பன்னீர்செல்வம், முரளி, முகமதுயூசுப் உட்பட பலரும் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செய்தனர்.

Tags:    

Similar News