அரியலூர் அருகே விறகில்லா மண்பானையில் இனிப்பு பொங்கல் வைத்த விவசாயிகள்

அரியலூர் அருகே விறகில்லா மண்பானையில் இனிப்பு பொங்கல் வைத்த விவசாயிகள் அதனை மக்களுக்கு வழங்கினார்.

Update: 2022-01-14 08:10 GMT

அரியலூர் அருகே விறகில்லா பொங்கல் வைத்த விவசாயிகள்.

அரியலூர் மாவட்டத்தில்  அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவராக இருப்பதவர்  தங்க சண்முக சுந்தரம். இவரது தலைமையில் நோயெதிர்ப்பு ஆற்றலைப் பெருக்கவல்ல அதிக நார்ச்சத்துக்கள் கொண்ட மரபுவகை ரகங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த ரகமாக விளங்கும் மாப்பிள்ளை சம்பா அவலைக் கொண்டு முதல் நாள் இரவே மழை தண்ணீரில் ஊறவைத்த வெல்லத்தை கரைத்து அடுப்பில் சூடு செய்யாமல் வெல்லப்பாகு தயாரித்து ஊறவைத்து மாப்பிள்ளை சம்பா அவலில் வெல்லப்பாகு கலந்து ஏலக்காய் வழக்கம் போல பயன்படுத்தும் முந்திரிபருப்பிற்கு பதிலாக ஏழைகளின் முந்திரிப்பருப்பு என அழைக்கப்படும் நிலக்கடலை பயன்படுத்தி அடுப்பில்லாமல் மண்பானையில் இனிப்பு பொங்கல் தயாரித்து கிராம மக்களுக்கு வழங்கப்பட்டது.

இது குறித்து தங்க சண்முக சுந்தரம் கூறும் போது மாப்பிள்ளை சம்பா அவல் எளிதில் செரிக்கக்கூடியது மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. அரியலூர் மாவட்டத்தில் இயற்கை ஆர்வலர்கள் பலரும் தங்களது பகுதிகளில் மாப்பிள்ளை சம்பா பயிரிட்டு பல மாவட்டங்களுக்கும் பரவலாக்கி வருகின்றனர் என்றார்.

இந்நிகழ்ச்சியில் திரளான பெண்கள் சமூக ஆர்வலர் சுயம்பிரகாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News