எருத்துக்காரன்பட்டி ஊராட்சியில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு

அரியலூர் அடுத்த எருத்துக்காரன்பட்டி ஊராட்சியில், சாலையோரத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 5 வீடுகள் இடிக்கப்பட்டன.

Update: 2022-04-29 11:00 GMT

அரியலூர் அடுத்த எருத்துக்கரான்பட்டி ஊராட்சியில்,  திட்டக்குடி சாலையோரத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இயந்திரங்கள்.


அரியலூர் அடுத்த எருத்துக்காரன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட திட்டக்குடி சாலையோரத்தை ஆக்கிரமித்து 5 குடும்பத்தினர் வீடுகளை கட்டி வசித்து வந்தனர். உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி, நீர்நிலைகள் மற்றும் சாலை ஆக்கிரமிப்புகளை தமிழக அரசு அகற்றி வருகிறது.

அதன்படி, அரியலூர் எருத்துக்காரன் பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட திட்டக்குடி சாலையோரத்தில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை காலி செய்யுமாறு, சம்மந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர்களுக்கு வருவாய்த்துறையினர் அறிவிப்பு கொடுத்தும் யாரும் வீடுகளை காலி செய்யவில்லை.

இந்நிலையில் வட்டாட்சியர் ராஜமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் அகிலா ஆகியோரின் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாரின் முன்னிலையில் மேற்கண்ட சாலையோரத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 5 வீடுகளை 2 பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு நேற்று இடிக்கப்பட்டன. வீடுகள் இடிப்பதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் தாங்களாகவே முன்வந்து வீட்டில் இருந்த பொருட்களை அப்புறப்படுத்திக்கொண்டனர்.

Tags:    

Similar News